வீட்டிற்குள் அணில் வந்து போகுதா? அடி தூள்.. பட்டாம்பூச்சி வீட்டை சுற்றி வருதா? பதற்றம் வேண்டாம் | Veetirkul anil vanthal enna palan: Anil Veetirkul Varuvathu Nallatha Kettatha

Anil 1689421347.jpg

Spirtuality

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை: உங்கள் வீட்டிற்கு அணில் வந்து சென்றால் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தமாம். அணில் கூட்டினை ஒருபோதும் கலைக்கக்கூடாது. அப்படி செய்தால் பட்சி தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மறைந்த முன்னோர்கள் பட்டாம்பூச்சி வடிவத்தில் வீட்டை சுற்றி வட்டமிடுகிறார்கள் என்றும் சொல்கிறது சாஸ்திரங்கள்.

கிராமத்தில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் அணில் பிள்ளை வந்து போகும். நகரங்களில் குடியிருப்புகளில் பட்டாம்பூச்சி சுற்றி வரும். அதை ஆச்சரியமாக நம்முடைய பிள்ளைகள் பார்ப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டிற்கு அணில் அடிக்கடி வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை ஒப்பிடுகையில் அணில் தனித்துவமான குணாதிசயம் கொண்ட உயிரினம் ஆகும். அணில் வீட்டிற்கு வந்து சென்றால் அதிர்ஷ்ட தேவதை வந்துவிட்டார் என்று அர்த்தமாம்.

Veetirkul anil vanthal enna palan: Anil Veetirkul Varuvathu Nallatha Kettatha

சிலரது வீடுகளில் சண்டை சச்சரவுகள் இருக்கும். அப்படி ஓயாத சண்டை நடக்கும் வீட்டிற்குள் ஒருமுறை அணில் வந்து சென்றால் அந்த சண்டைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்குமாம். ராமபிரான் அணிலை தடவிக்கொடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. பழ மரங்கள் அதிகம் வளர்க்கும் வீடுகளில் அணில்கள் வரும். கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவை அணிலுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்த மரங்களை வீட்டில் வளர்த்தால் அணில்கள் உங்கள் வீடு தேடி வரும். அணில்கள் வீட்டிற்குள் வருவது மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

வீட்டிற்குள் இருக்கும் பிரச்னைகள் தீரும், பிரிந்து போன சொந்தங்கள் ஒன்றாகச் சேர்வார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். விவாகரத்து வரை சென்றாலும் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. தவறான வழியில் செல்ல இருப்பவர்களுடைய மனநிலையில் நல்ல ஒரு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பொருளாதார நிலை அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரப்போகிறது என்பதை அணில்கள் உணர்த்துகின்றன.

நம்முடைய வீட்டில் குருவிக்கூடு, அணில் கூடு கட்டியிருந்தால் அதை நாம் கலைத்து விடக்கூடாது. தெரிந்தோ, தெரியாமலோ நாம் கூட்டினை கலைத்து விட்டால் நமக்கு பட்சி தோஷம் ஏற்படும். பட்சி தோஷம் பலவிதமான பிரச்சனைகளை நமக்கு கொடுக்கும் என்பதால் அணில் கூட்டை எப்பொழுதும் கலைக்கக் கூடாது.

அதே போல பட்டாம்பூச்சி நம்முடைய வீட்டிற்கு வந்து போவதும் நல்ல செய்தியை கொண்டு வரும். மறைந்த நம்முடைய முன்னோர்கள்தான் பட்டாம்பூச்சி வடிவத்தில் நம்முடைய வீட்டிற்குள் வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது. மஞ்சள் வண்ண நிற பட்டாம்பூச்சி, பொருளாதார நிலையையும் செல்வ வளத்தையும் அதிகரிக்குமாம். பச்சை நிற வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வந்தால் அது ஆரோக்கியத்தினை அதிகரிக்குமாம். வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வருவதன் மூலம் திருமணம் நடைபெறுவதில் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டிருந்தால் அது நீங்குமாம்.

Veetirkul anil vanthal enna palan: Anil Veetirkul Varuvathu Nallatha Kettatha

விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்பதைக்கூட பட்டாம்பூச்சிகள் உணர்த்துமாம். நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஏதோ ஒரு நல்ல விசயத்தை சொல்வதற்காக பட்டாம்பூச்சியின் வடிவத்தில் வீட்டிற்குள் வருகிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே வீட்டிற்கு பட்டாம்பூச்சி வந்தால் பதற்றப்பட வேண்டாம். அணில் பிள்ளை வந்தால் அஞ்ச வேண்டாம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் தர்ப்பணம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் தர்ப்பணம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

English summary

Veetirkul anil vanthal enna palan: Anil Veetirkul Varuvathu Nallatha Kettatha: If squirrels come and go in your house, it means good luck. Squirrel nests should never be dismantled. It is said in the Shastras that doing so will cause Paksi Dosha. The scriptures also say that the deceased ancestors hover around the house in the form of a butterfly.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *