“எதிரணியில் கதவு, ஜன்னல் திறந்திருந்தும் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை” – டி.ஆர்.பி.ராஜா சாடல்

Whatsapp Image 2024 01 07 At 11 01 04.jpeg

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கர்த்தனாதபுரத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழில்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “திராவிட நாயகன் தமிழக முதல்வரின் நல்லாட்சியில் மன்னார்குடி மின்னிக்கொண்டே வருகிறது. தமிழகமும் பள பளவென மின்னிக்கொண்டிருக்கிறது.

டி.ஆர்.பி.ராஜா

மன்னார்குடி கர்த்தனாதபுரத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்த் போது பாலம் கட்டுவதற்கான நிதியை பெற்றுக் கொடுத்தும் அதற்கான முயற்சியை அப்போதைய ஆளும் கட்சி எடுக்கவில்லை. தற்போது பல தலைமுறைகளாக குடியிருக்கும் 64 குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் டிசைன் செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் இந்தியா கூட்டணி மட்டும் தான் வலுவாக உள்ளது. எதிரணியில் கதவு, ஜன்னல் திறந்து இருந்தாலும் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை. காற்று மட்டுமே வருகிறது. மக்கள் முடிவிற்கு மாறாக தேர்தல் முடிவு வரும் போது வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் தான் பிரதான கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது. அது ஒருபுறம் இருந்தாலும், வாக்கு பதிவு இயந்திரத்தில் எவ்விதமான கோளாறு நடந்தாலும், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

டி.ஆர்.பி.ராஜா

சாலையில் விளையாடும் குழந்தை பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதையாவது செய்யும். நம் கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். சிறு குழந்தையின் செயலை போலவே பாஜக தலைவர் அண்ணாமலையின் செயலும் உள்ளது அதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும்.

எங்களுக்கு மக்கள் பணி பெரிதாக இருக்கிறது. திராவிட மாடலை இந்தியாவுக்கும் உலகத்திற்கும் கொண்டு செல்கின்ற முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். அண்ணாமலையின் சில்லறைத்தனமான வேலைகளை நாம் கண்டுக்கொள்ள வேண்டியதில்லை. டெல்டாக்காரரான முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்சாலையும், மன்னார்குடியில் சிறிய தொழில் பூங்காவும் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ”என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *