Tamil News Live Today: மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம்; இன்று திறந்துவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! | Tamil News Live Today updates dated on 26 02 2024

1708912415 Untitled 2a.jpg

மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம்; இன்று திறந்துவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2021-ம் ஆண்டு சட்டமன்றத்தில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த இரண்டு வருடங்களாக கருணாநிதி நினைவிடம் கட்டப்பட்டு வந்தது.

கருணாநிதி நினைவிடம்

கருணாநிதி நினைவிடம்

இந்த நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதையடுத்து, இன்று மாலை 7 மணிக்கு, நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சுமார் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஓர் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திறப்பு விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரை பகுதியில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *