மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம்; இன்று திறந்துவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2021-ம் ஆண்டு சட்டமன்றத்தில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த இரண்டு வருடங்களாக கருணாநிதி நினைவிடம் கட்டப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதையடுத்து, இன்று மாலை 7 மணிக்கு, நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சுமார் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஓர் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரை பகுதியில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.