அதைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போதெல்லாம், கூட்டணி கிடையாது என அ.தி.மு.க உறுதியாகவும், பா.ஜ.க நழுவும் விதமாகவுமே பதிலளித்து வந்தன. அதே நேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “கூட்டணிக்காக பா.ஜ.க-வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பா.ஜ.க-வுக்கான கதவை அ.தி.மு.க எப்போதோ மூடிவிட்டது. இனி அது திறக்காது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நமது விகடன் இணையதளப்பக்கத்தில், “நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி சேருமா அ.தி.மு.க?” எனக் கேள்வி எழுப்பி “ சேரும் – வாய்ப்பே இல்லை – தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியும்” என மூன்று விருப்பத் தேர்வுகளையும் கொடுத்திருந்தோம்.
இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட வாசகர்கள், “நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி சேருமா அ.தி.மு.க” என்ற கேள்விக்கு, சேரும் என 34 சதவிகித வாசகர்களும், வாய்ப்பே இல்லை என 32 சதவிகித வாசகர்களும், தேர்தல் நேரத்தில்தான் தெரியும் என 34 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது Vikatan.com பக்கத்தில், `கோட்சே, சாவர்க்கர் பெயர்களை குறிப்பிட்டு சபாநாயகர் அவையில் பேசியது?’ குறித்த கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. அதில் உங்கள் மேலான கருத்துகளை பதிவிடலாம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY