நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடங்கப்பட்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அந்த யாத்திரையின்போது, நாய்க்குட்டி வைத்திருந்த ஒருவரைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, ஒரு பிஸ்கட்டை அவருக்குக் கொடுத்தார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, “கட்சித் தொண்டர்களை ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறார். நாய் பிஸ்கட்டைக் கொடுக்கிறார்” என பா.ஜ.க-வினரால் வைரலாக்கப்பட்டது.
பா.ஜ.க-வின் ஐ.டி செல் தலைவர் அமித் மாளவியா, “நாய்க்குட்டி அந்த பிஸ்கட்டை வாங்காததால், அது கட்சித் தொண்டருக்கு வழங்கப்பட்டிருக்கிறது” எனக் கூறி, அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அது பேசுபொருளானது குறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதில், “நாய் வைத்திருந்தவரை அழைத்தேன். அவர் நாயுடன் வந்தார். அப்போது நாய், கூட்டத்தைப் பார்த்து பதற்றமாக நடுங்கியது. அதைச் சமாதானப்படுத்த, அதற்கு ஒரு பிஸ்கட் கொடுத்தேன்.