ஆனால், காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான உறவை அவர்கள் பாதிக்கமாட்டார்கள்” எனக் கூறியிருந்ததார்.
இந்த நிலையில், இன்று மம்தா குறித்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மம்தா பானர்ஜி இன்னும் `இந்தியா’ கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறார், கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டார். அவர் வெளியேறியதற்கான காரணங்கள் என்ன என்பதை உங்களாலேயே யூகிக்க முடியும். பரவாயில்லை….
பீகாரில் இந்தியா கூட்டணியாக இணைந்து போராடுவோம். எனவே, இந்தியா கூட்டணியில் பிளவு என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கட்சிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் சாதாரணமானவை. அதைப் பேசுபொருளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.