புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்துநர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று கூறி இருக்கிறார்கள். அவர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என்று எண்ணுகிறோம். இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக நிறைய கோப்புகள் ஆளுநரிடம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சிறிய அளவிலான கோப்புகளுக்கு அனுமதி தந்துள்ளார். இன்னும் கோப்புகள் உள்ளது. இஸ்லாமியர்கள் சிறைவாசிகளை பொறுத்த வரை நாங்கள் எடுத்த நடவடிக்கையை போல் எந்த அரசும் எடுக்கவில்லை. இஸ்லாமிய சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்ட கோப்புகளில் சில கோப்புகளுக்கு கையொப்பமாகி உள்ளது.
இன்னும் ஆளுநர் அனுப்ப வேண்டிய கோப்புகள் உள்ளது. கொடநாடு வழக்கில் தடயவியல் அறிக்கையின் பொறுத்து அடுத்த கட்ட விசாரணை நகரும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என எல்லாரும் பா.ஜ.க-விடம் கொத்தடிமைகளாக அவர்களது கட்சியை அடகு வைத்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை கொடநாடு வழக்கு குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை கொடநாடு வழக்குக்கு புத்துயிர் கொடுத்து செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர். அவர் எடுத்த நடவடிக்கை தான் வழக்கு இதுவரை நகர்வதற்கு காரணம்.
எந்த நேரத்திலும் அமலாக்கத்துறையை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். இன்றைக்கும் இ.டி, ஐ.டி என யார் வந்தாலும் வரட்டும். பிரச்னை எதுவும் இல்லை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயமிருக்கும். எங்களுக்கு எந்த மடியிலும் கனமும் இல்லை, வழியில் பயமும் இல்லை. வந்தால் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அவர்களுக்கு காபி விருந்து வைத்து உபசரிக்கவும் தயாராக இருக்கின்றோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY