Murasoli Land Case Update | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

363437 Chennai Hc.jpg

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கபட்ட புகார் தொடர்பாக பட்டியலின ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை  சென்னை உயர் நீதிமன்றம், பிப்ரவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பத்திரிக்கை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம்  தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விதிகளின்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பி  விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையத்திற்கு உத்தரவிட்டு,  வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், மூத்த வழக்கறிஞர் ஆஜராகும் வகையில் விசாரணையை தள்ளிவைக்க கோரியதை அடுத்து, விசாரணையை பிப்ரவரி 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஜனவரி 10ம் தேதி நடந்த விசாரணையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நிலம் தொடர்பான வழக்கை தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்தின் உரிமைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்கு இல்லை என்றாலும், நிலம் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க அதிகாரம் உள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க கூடாது என தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.  

முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அப்போதைய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *