`கரூரில் திமுக-வின் ஏவல்துறையாகச் செயல்படுகிறது காவல்துறை!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
கரூரில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.எஸ்.பி-யிடம், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க-வினரோடு வந்து புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க கழக பொதுச்செயலாளர், புரட்சி தமிழர் அண்ணன் எடப்பாடியார், ‘பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து, அவர்களது வீட்டில் வேலை செய்துவந்த பட்டியலின சமூகப் பெண்ணை மிகக் கொடுமையாக…