நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அதில் உரையாற்றிய கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி டி.கே சுரேஷ், “பட்ஜெட்டில் தென்னிந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவுக்குச் சேர வேண்டிய நிதி, வட இந்தியாவிற்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்தி பேசும் வட மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் எனப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து கர்நாடகாவுக்கு போதிய நிதி கிடைக்கவில்லை. எனவே, `தென்னிந்தியா” என்ற தனி நாடு கோரிக்கை விடுப்பதைத் தவிர, தென்னிந்தியர்களுக்கு வேறு வழியில்லை” எனப் பேசினார்.
டி.கே.சுரேஷின் கருத்துக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, “காங்கிரஸ் கட்சிக்கு, பிரித்தாளும் கட்சி என்ற வரலாறு இருக்கிறது.