மூதாட்டி தாக்கப்பட்ட வழக்கு: 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை | Two former MLA sentenced to two year jail in attacking case

Img 20240113 133424.jpg

இதை அடுத்து மீனாட்சியைத் தாக்கிய வழக்கை விசாரித்த குத்தாலம் காவல்துறையினர் திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை முத்து மகன்கள் பி.சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கல்யாணம், கோவிந்தராஜ் மற்றும் குத்தாலம் பி.கல்யாணம் அவரது மகன்கள் குத்தாலம் க.அன்பழகன், கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் க.அறிவழகன், மற்றும் மனோகர், ரவி உள்ளிட்டோர் மீது குத்தாலம் காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனைச் சட்டம் 147, 294 (பி), 324 மற்றும் 506/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், இவ்வழக்கை விசாரித்த மயிலாடுதுறை நீதிபதி கலைவாணி நேற்று மாலை தீர்ப்பு வழங்கினார். அதன்படி தாக்குதலுக்கு காரணமான பி கல்யாணம் உள்ளிட்ட ஆறு பேருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். தண்டனையை ஒத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டுக்காக அளிக்கப்பட்ட மனுவின் மீது நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையில் மேல்முறையீட்டுக்காக ஒரு மாத காலம் அவகாசம் வழங்குவதாக குறிப்பிட்டிருந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *