இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ” 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து புரட்சி பாரதம் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அதன்படி, 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதத்துக்கு கே.பி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெகன் மூர்த்தி வெற்றியும் பெற்றார். பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதை அறிவித்ததும், முதல் ஆளாக அதிமுக-வுக்கு ஆதரவு கொடுத்தது ஜெகன்தான். அவரின் கட்சி சார்பாக மனிதம் காப்போம் மாநாடு விழுப்புரத்தில் கடந்த டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்பட்டது.
அதில் சிறப்பு விருந்தினராக பொதுச் செயலாளர் எடப்பாடியை அழைத்து பெருமைப்படுத்தினார் ஜெகன். இதனால், எடப்பாடியும் ஜெகன் மீது நல்ல அன்பில் இருக்கிறார். இந்நிலையில்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் உள்ள 7 தனித்தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்டு இருக்கிறார் ஜெகன். அதிலும் குறிப்பாக புரட்சி பாரதம் பலமாக இருக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை குறிவைக்கிறார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை தலைமை கழகத்தில் நடந்து வருகிறது. நல்ல முடிவை எடப்பாடியாரே விரைவில் அறிவிப்பார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.