ரூ.16,000 கோடி நிதி தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நிதியைக் கொடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் யாருக்கும் தெரியாது. யார், எந்தக் கட்சிக்கு, எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்ற விவரங்களை யாரும் அறிந்துகொள்ள முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து இதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ் அதிகளவில் நிதி மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்குத்தான் போயிருக்கிறது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடியையும், வரிச்சலுகையையும் மத்திய அரசு வழங்கியிருக்கிறது. அதற்கு கைமாறாக, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் பா.ஜ.க-வுக்கு அவர்கள் வாரிக்கொடுக்கிறார்கள் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்துவருகின்றன.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.