அயோத்தி விழா: `மசூதிகளில் இஸ்லாமியர்கள் `ஜெய் ஸ்ரீராம்’ என முழங்க வேண்டும்’ – ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி| Muslims to chant Jai Shri Ram during Ram Temple inauguration, Says RSS leader Indresh Kumar

Gridart 20240101 184032286.jpg

மேலும், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாததால், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, மசூதிகள், மதரஸாக்களில் ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமியர்களும் முழங்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்த முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச்சின் தலைவருமான இந்திரேஷ் குமார், `ராம் மந்திர், ராஷ்டிர மந்திர் – ஒரு பொதுவான பாரம்பர்யம்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டார்.

ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ்

அந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திரேஷ் குமார், “இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களில் 99 சதவிகிதம் பேர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். நமக்கெல்லாம் ஒரே மூதாதையர். அவர்கள் தொடர்ந்து அவ்வாறே இருப்பார்கள். அவர்கள், தங்களின் மதத்தைத்தான் மாற்றியிருக்கிறார்களே தவிர, நாட்டை அல்ல. நமக்கென்று பொதுவான மூதாதையர்கள், பொதுவான முகங்கள், கனவு, அடையாளம் போன்றவை இருக்கிறது. நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். நமக்கும் வெளிநாட்டினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச்சின் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன். திறப்பு விழா சமயத்தில், ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என்று 11 முறை மசூதிகள், மதரஸாக்கள், தர்காக்கள், மக்தாப்களில் முஸ்லிம்கள் முழங்க வேண்டும். அதன்பிறகு வழக்கமான தொழுகையை மேற்கொள்ளலாம்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *