ஜன் விஸ்வாஸ் மசோதா: தொழில்முனைவோர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு சிறைத் தண்டனை கிடையாது…! | Jan Vishwas: No prison for minor offence

Hunters Race Mybhn8kaaec Unsplash.jpg

ஜன் விஸ்வாஸ் திட்டத்தின் கீழ், 19 அமைச்சரவை கீழ்வரும் 42 சட்டங்களில் சுமார் 180 மற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் படி, தொழில்முனைவோர்கள் கவனக்குறைவால் அல்லது தெரியாமல் செய்யும் சின்ன சின்ன தவறுகள் குற்றம் (decriminalise minor offence) ஆகாது.

பெரும்பாலும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தெரியாமல் செய்யும் சின்னச் சின்ன தவறுகளுக்காக சிறை சென்று, தொழில் தொடங்குவதையே விட்டுவிடுகின்றனர். இது முளையிலேயே கிள்ளி எறிவது போன்றது ஆகும். இவர்கள் யாரும் கிரிமினல்கள் இல்லை. லட்சக்கணக்கில் கிடைக்கும் சம்பளத்தை விட்டுவிட்டு தொழில் தொடங்க வருகிறவர்கள் ஆவார்கள். ஆகவே, இந்த சட்டத்திருத்தம் இவர்களுக்கு பயத்தை நீக்கி உத்வேகத்தை தருவதாக அமையும்.

அமைச்சர் பியூஷ் கோயல்

அமைச்சர் பியூஷ் கோயல்

பொதுவாக ஒரு தொழில் தொடங்க குறைந்தபட்சம் 30 ஒப்புதல்கள் தேவைப்படும். இவை அனைத்தும் எளிதாக கிடைத்துவிடாது. இவர்கள் தெரியாமல் அல்லது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று விடும் ஒன்றிரண்டு ஒப்புதல்கள் இவர்களை பாதிக்கிறது. இந்தியாவில் ஒப்புதல் பெறுவது கஷ்டமில்லை, ஒற்றை சாளர ஒப்புதல் முறை இருக்கிறது என்று கூறுவதெல்லாம் சுத்தப்பொய். ஒரு தொழில்முனைவோர் அவரது தொழிலை பதிவு செய்ய ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாகத் தான் பதிவு செய்ய வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *