இதுகுறித்து விளக்கம் கேட்க திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான நா.கார்த்திக்கை தொடர்பு கொண்டோம். அப்போது அவர், “அது தவறானது. நான் அப்படியெல்லாம் யாரிடமும் பேசியதில்லை. இது என் கவனத்துக்கு வரவில்லை. அந்த ஆடியோ இருந்தால் அனுப்புங்கள்.” என்றார். நாம் ஆடியோ அனுப்பியவுடன் வாட்ஸப் காலில் வந்த கார்த்தி, “இதற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. இதை அப்படியே விட்டுவிடுங்கள்.
அந்த ஆடியோவில் எதிரில் யாரின் குரலும் கேட்கவில்லை. வேண்டாதாவர்கள் யாரோ திட்டமிட்டு இப்படி ஒரு போலியான ஆடியோவை உருவாக்கியுள்ளனர். யார் மாதிரி வேண்டுமானாலும் பேசும் மிமிக்ரி கலைஞர்கள் உள்ளனர். தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. ஆய்வுக்கு உட்படுத்தாமல் அதை எப்படி என் குரல் என்று சொல்ல முடியும்?” என்றார்.