UCC-ஐ எதிர்த்து விசிக ஆர்ப்பாட்டம் | பாபநாசம் அணையிலிருந்து நீர் திறந்த அப்பாவு – News In Photos

Img 1689770729002.jpg

ராமநாதபுரம்:

ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சிகளின் காத்திருப்புப் போராட்டம் நடந்தது.

புதுச்சேரி:

தீ விபத்தில் வீடு சேதமடைந்த நிலையில், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பாதிப்படைந்த வீட்டுக்கு ரூபாய் 50,000-க்கான காசோலையை வழங்கினார்.

சென்னை:

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

வேலூர்:

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

கன்னியாகுமரி:

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் நல அலுலகத்தில் ஸ்மார்ட் போன் பெறுவதற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள்.

கன்னியாகுமரி:

நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில். காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி:

ஆடி மாத விழாவையொட்டி நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிலிலுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன்.

திருநெல்வேலி:

பாபநாசம் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீரைத் திறந்துவைத்தார்.

தென்காசி:

தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை சார்பில் தென்காசி, கடையநல்லூர் பகுதிகளில் அரசு தொழிற்பயிற்சி மையங்களை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

ராமநாதபுரம்:

வானிலை அறிவிப்பின்படி ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தினர்.

விருதுநகர்:

மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புக் கடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

திண்டுக்கல்:

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி:

மாநிலப் பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமையிலான கிராமவாசிகள், அமைச்சர் நமச்சிவாயத்தைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரி:

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா
வழங்கினார்.

புதுச்சேரி:

மணவெளி பகுதியில் 100 நாள்கள் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை, சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணகுமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

நீலகிரி:

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்துக்கான படிவங்கள் நியாய விலைக் கடைகளில் வரும் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் அம்ரித் தெரிவித்திருக்கிறார்.

நீலகிரி:

ஊட்டியில் தென்மேற்குப் பருவமழை தாமதமாக தொடங்கியிருக்கும் நிலையில், விவசாய தோட்டத்தில் மழையைப் பொருட்படுத்தாமல் பிளாஸ்டிக் உடை அணிந்து களை பறிக்கும் தொழிலாளர்கள்.

சென்னை:

வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயலும் மத்திய அரசைக் கண்டித்து வி.சி.க., தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்:

அனைத்து உள்ளாட்சிப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *