அதுமட்டுமல்ல மஹா சிவராத்திரியை முன்னிட்டு முன்னிட்டு ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் தனியே நேற்று மாலை திடீரென ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்திறங்கினார். தொடர்ந்து அவர் ஆன்மீக பயணமாக சதுரகிரி மலை மீது உள்ள சுந்தரமகாலிங்கம் சாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள விஸ்வேஸ்வரர் தியான நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகமும், திருநீறு அபிஷேகமும் செய்து மனமுருக வேண்டிக் கொண்டார்.
வழக்கமாக ஜெயபிரதீப்தான் ஆன்மிக பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர். ஆனால் அவரை மிஞ்சும் அளவுக்கு ஓ.பி.ஆர்.நேற்று பயபக்தியுடன் பூஜையில் கலந்துக்கொண்டது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பி.எஸ்.அணி சார்பில் அவரின் மகன்களில் யாரேனும் ஒருவர் விருதுநகரில் போட்டியிடலாம் என கணிப்புகள் இருக்கும் நிலையில் ஓ.பி.ஆரின் தனிப்பட்ட விஜயம், ஆன்மிக ஈடுபாடு ஆகியவை, அவர் வேட்பாளராக களமிறங்குவதற்கான நகர்தலாக இருக்குமோ என சந்தேகிக்கிறோம்” என எதிர்பார்ப்பை கிளப்பினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY