ராமர் குறித்த பேச்சு; `ஆ.ராசா மனநிலை பாதிக்கப்பட்டவர்..!’ – உத்தவ் கட்சி காட்டம் | A. Raja is mentally ill: should be treated in a good hospital: Uddhav Thackeray Party slams

Img 20240218 Wa0021.jpg

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க மூத்த தலைவருமான அ.ராஜா சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், `இந்தியா ஒரே நாடு கிடையாது, துணைக்கண்டம்” என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு ராமர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் (உத்தவ்), ராஜாவின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் செய்தித் தொடர்பாளருமான ஆனந்த் துபே அளித்துள்ள பேட்டியில்,’ “ராவணன்கூட ராமரை நம்பவில்லை. அவனது நிலை என்னவென்று நாம் பார்த்தோம். ஒருவர் கடவுளை நம்புகிறாரோ இல்லையோ… கடவுள் இந்த பிரபஞ்சம் மற்றும் எங்கள் இதயங்களில் இருக்கிறார். ஒரு முட்டாள் ராமரைப்பற்றி அறியவில்லையென்றால் அவருக்கு ஞானம் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். ராமர் தன்னைப்பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு தெளிவுபடுத்தட்டும். ராஜாவின் கருத்துக்கு இந்தியா கூட்டணி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *