Day: March 6, 2024
“வார்த்தைகளில் கவனமாக இருங்கள்…" – ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் சின்னம் கோரிக்கை என தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்த நிலையில், தேர்தல் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க தலைவர்களை ‘பிக்பாக்கெட்’ எனக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து, கடந்த…
`திமுக ஓட்டில்தானே ஜெயித்தாய்?' – காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை ஒருமையில் திட்டிய திமுக நகர்மன்றத் தலைவர்!
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் புதிய கட்டடம் மற்றும் நூலகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.4.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து நூலகத்திற்கான கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை இன்று போடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ராஜ்குமார் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் கல்லூரி முதல்வர் பத்மினி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதேவி நர்மதா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ…
செந்தில் பாலாஜி கஸ்டடி | `ஆம் குடும்ப ஆட்சிதான்' – ஸ்டாலின் | கொல்லப்பட்ட 9 வயது சிறுமி – Quick Read
‘ஒற்றை செங்கலுடன் உங்க இளவரசர் வந்தாரே, என்ன ஆச்சு?!’ – முதல்வருக்கு வானதி கேள்வி நன்றி
`குஜராத் மாடல் Vs திராவிட மாடல் | ஆளுநர் பிரச்னை | 2024 தேர்தல்' – ஸ்டாலினின் `Outlook' நேர்காணல்
தமிழ்நாட்டின் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவுட்லுக் (மார்ச் 2024) ஆங்கில இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்…. `2021-ம் ஆண்டு நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்னென்ன?’ முதல்வர் ஸ்டாலின் “கோவிட் இரண்டாவது பேரலை என்கிற மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்றது. மக்களின் உயிரைக் காக்க வேண்டிய மிகச் சவாலான பணி எங்கள் முன் இருந்தது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்தையும்…
ஜோதிடம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் செவ்வாய், சுக்ரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு – சுக ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 08.03.2024 அன்று சுக்கிர பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: இந்த வாரம் அடுத்தவர் பிரச்சினைகளில்…
sandeshkhali: `பெண்கள்மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது!' – பிரதமர் மோடி காட்டம்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில், நாரி சக்தி வந்தன் நிறைவுக் காரியக்ரம் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் உரையாற்றிய பிரதமர் மோடி,“மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதால் அச்சமடைந்துள்ளனர். பிரதமர் மோடி – மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் தலைவர்கள் எனக்குக் குடும்பம் இல்லாததால்தான் வாரிசு அரசியலுக்கு எதிராகப் பேசுகிறேன் என்று…
ஜோதிடம்
கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 08.03.2024 அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்கள்: இந்த வாரம் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள்…
ஜோதிடம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் கேது – என கிரகங்கள் வலம் வருகின்றன | கிரக மாற்றம்: 08.03.2024 அன்று சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு…
“தேர்தல் வாக்குறுதிகளை 90% நிறைவேற்றியவர் ஸ்டாலின்!” – சொல்கிறார் அமைச்சர் அன்பரசன் | Tamilnadu industrial minister speech in nilgiri event
தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் அன்பரசன் , “தொழில்துறையைப் பொறுத்தவரை தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தற்போது பல்லாயிரக்கணக்கான புதிய தொழில் முனைவோர்கள் நாள்தோறும் உருவாகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியலின மக்கள் அதிக அளவில் தொழில் முனைவோர்களாக முன்னேறி வருகிறார்கள். இது தி.மு.க ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அமைச்சர் அன்பரசன் தொழில்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளுமே முதல்வரின் முயற்சியால் பல்வேறு உச்சத்தை எட்டியிருக்கிறது….