கடந்த சில வாரங்களாக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா, பா.ஜ.க ஆகிய கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன. ஆந்திராவில் 8-10 மக்களவைத் தொகுதிகளை பா.ஜ.க கேட்பதாகவும், ஆனால், 4 – 5 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்பதில் தெலுங்கு தேசம் உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்று தொகுதிகள் கிடைத்தால்கூட போதும் என்று பா.ஜ.க கணக்குப் போடுகிறதாம். இங்கே என்ன சிக்கல் என்றால், தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி சேர்ந்தால், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பா.ஜ.க-வையும் பகிரங்கமாக எதிர்க்கவும், விமர்சிக்கவும் தேவை ஏற்படும். அப்படியொரு சூழல் வந்தால், ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டுக்கு அமலாக்கத்துறை செல்லும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆந்திரா அரசியல் அதிரிபுதிரியாக மாறும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY