கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் சித்தாண்டீஸ்வரர் கோயில் அருகே வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு வயது 59. விவசாயம் செய்து வந்த ராதா கிருஷ்ணனுக்கு 7 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவரது மனைவி சரஸ்வதி. இவருக்கு வயது 48. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சரஸ்வதியின் பெற்றோர் அவருக்கு ஒரு ஏக்கர் நிலம் நிலம் கொடுப்பாதாக தெரிவித்து இருநததாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை விற்று 27 லட்சம் ரூபாயை சரஸ்வதி இடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த தொகையில் கணவர் ராதாகிருஷ்ணனுக்கு பங்கு தராமல், சரஸ்வதி, ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
Breaking News, 24/7