அதாவது, சம்பவத்தன்று காலை தாமஸ் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவாங்கி அருந்தியுள்ளாா். மதுபோதை உச்சம் அடைந்தபோது தனது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது, கடலோர காவல் நிலையம் வழியாக செல்லும்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாக கூறப்படுகிறது. ஆனால், அவன் மறுத்து சத்தம் போட்டுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த தாமஸ் தான் மறைத்து வைத்து இருந்த இரண்டு சிறிய ரக கத்தியால் சிறுவனின் கழுத்து, வயிறு, கைப்பகுதியில் கொடூரமாக குத்தியதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். இதில் துடிதுடித்த சிறுவன் உயிரை காப்பாற்ற காவல்நிலையம் நோக்கி ஓடிய நிலையில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாா்.
Breaking News, 24/7