இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இப்போது தெலங்கானாவில் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால் ஆந்திராவில் தனது கவனத்தை செலுத்த ஷர்மிளா முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு ஷர்மிளாவை பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ஓட்டு சதவீதம் ஒன்றை இலக்கத்திற்கு மாறிவிட்டது. சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் செய்ய காங்கிரஸ் கட்சியில் வலுவான தலைவர்களும் இல்லாமல் இருக்கிறது. அந்த இடத்தை ஷர்மிளா நிரப்புவார் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.