`நரம்பை நீக்கிவிட்டனர் காலைக்கூட அசைக்க முடியவில்லை' – செந்தில் பாலாஜி, `ED Will take Care'- நீதிபதி
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை, 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், காவலுக்காக விண்ணப்பித்து அமலாக்கத்துறையினர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை இன்று மாலை அணுகினர். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் அவர்கள் சமர்ப்பித்தனர். இதையடுத்து மாலை 5 மணியளவில் விசாரணை தொடங்கியது. புழல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தாடியுடன்…