தமிழ்நாடு மாவட்ட செய்திகள்`Dmk Files-2' வெளியிட்ட அண்ணாமலை | நிலம் கையகப்படுத்தும் பணியிலிறங்கிய NLC – News In Photos admin9 months ago01 mins சென்னை: தி.மு.க நிர்வாகிகள் ஊழல் குறித்த இரண்டாம் கட்ட பட்டியல் அடங்கிய புகாரை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அந்தக் கட்சியினர் வழங்கினர். அதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். கடலூர்: என்.எல்.சி 2-வது சுரங்க விரிவாக்கப் பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கடலூர் சேத்தியாதோப்பு, வளையமாதேவி அருகே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. கடலூர், தாழங்குடா அருகே மீனவர்களின் தூண்டிலில் சிக்கிய 5.5 கிலோ எடையுள்ள அதிசய கணவா மீனை, அந்தப் பகுதி மீனவர்கள், பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். புதுச்சேரி: கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையிலுள்ள கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சேலம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 9,000 கனஅடியாக இருப்பதால், பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருக்கிறது. தஞ்சாவூர் பைபாஸ் சாலையோரம் உள்ள மைல் கற்களில் வண்ணம் பூசி பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில்: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தூய பனிமய மாதா பேரலாயத்தின் 441-வது திருவிழாவை முன்னிட்டு, 16-வது தங்கத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நீலகிரி: ஊட்டி, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணி. புதுச்சேரி: விவசாய மின் மோட்டார்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பான மின்துறை அறிக்கையைக் கண்டித்து, தி.மு.க உட்பட ஆதரவு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலூர்: விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம். சென்னை: மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து, திராவிடர் கழக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி: கார்கில் போரில் இந்திய வீரர்களுக்கு உதவிய புதுச்சேரி டி.ஜி.பி ஸ்ரீனிவாஸை, துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பாராட்டினர். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா. தேனி: சிறப்புக் கால்நடை மருத்துவ முகாம் இன்று தேனியில் நடைபெற்றது. திண்டுக்கல்: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட அல் ஆசிக், திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டான். நாகர்கோவில்: மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்ட ம் நடத்தி, புதிய நிரந்தரப் பணியிடங்களை உருவாக்கி, அதில் MRB ஒப்பந்த செவிலியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். விருதுநகர் குறுவட்ட அளவிலான கபடிப் போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவர்கள். ஈரோடு: மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஈரோடு மாநகராட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதாகைகளை கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். சேலம்: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பணி செய்து வருவதற்கு சம்பளம் முறையாக தராததைக் கண்டித்து, சேலம் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த ஊழியர்கள். விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி விழுப்புரம், நகராட்சி அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். திருநெல்வேலி: திசையன்விளையில் முத்தையா என்ற இளைஞர் கொல்லபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி: 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள். புதுச்சேரி காவல்துறையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அனிதா ராய் ஐ.பி.எஸ், சபாநாயகர் செல்வத்தைச் சந்தித்தார். நன்றி Post navigation Previous: மாஸ்டர் பிளான்.. கர்நாடகா மாநில பாஜக தலைவராகும் சிடி ரவி? வெளியான பரபர தகவல்! பின்னணி இதுதான்! ஆஹா | CT Ravi may replaces Nalin Kumar Kateel as Karnataka state BJP PresidentNext: திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் – ஆட்சியர்களுக்கு உத்தரவு! Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ