அதன் பிறகுதான் பேருந்தை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கொண்டுவிட்டேன். வாகன ஆய்வாளர் வந்து ஆய்வுசெய்தார். பின்னர், பேருந்தை டெப்போவுக்குக் கொண்டு செல்லும்படியும், ரிப்போர்ட்டை அதிகாரிகளிடம் கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
பேருந்து ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட தகவல் தெரிந்ததும், ராணித்தோட்டம் டெப்போ அதிகாரிகளும் அங்கு சென்றனர். இது குறித்து ராணித்தோட்டம் டெப்போ மேலாளர் சுந்தர்சிங்கிடம் பேசினோம். “வாகன ஆய்வாளர் சோதனை செய்துவிட்டு, அவர்கள் கூறிய புகார்கள் எதுவும் இல்லை என்றார். ஓட்டுநர் ஏன் அப்படி செய்தார் என்பது தெரியவில்லை” என்றார்.
`அரசுப் பேருந்தின் நிலை சரியில்லை, ஓட்டவே பயமாக இருக்கிறது’ எனக்கூறி பேருந்தை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.