“பாஜக கூட்டணியில் அதிமுக இல்லாததால், எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவை பிரதமர் புகழ்கிறார்” – திருநாவுக்கரசர் | Thirunavukarasar press meet at madurai

Img 20240229 185503.jpg

இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஏதும் பேசவில்லை, தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் அரசியல் பேசி வருகிறார்.

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து 10 ஆண்டுகளாக ஞாபகம் வராத பிரதமருக்கு, இப்போதுதான் ஞாபகம் வந்துள்ளது. தற்போது இருவரையும் பாராட்டி பேசி உள்ளார், எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றிய நிலையில் இந்திரா காந்தி ஏற்பாட்டில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டார், அதனால் எம்.ஜி.ஆர் கூடுதலாக மூன்று வருடம் உயிரோடு இருந்தார்.

உடல் நலம் குன்றிய ஜெயலலிதாவை மோடி நினைத்திருந்தால் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கலாம். பிரதமர் மோடி எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாது. பா.ஜ.க-வின் கூட்டணியில் அ.தி.மு.க இல்லாத காரணத்தால் வாக்குகளுக்காக எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *