'தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்; முதல்வர் அறிவிக்கும்வரை சஸ்பென்ஸ்!' – அமைச்சர் ரகுபதி

Ragupathi 1.jpg

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 73 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது பல காரியங்களை செய்ய தவறி விட்டார். மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர தவறிவிட்டார். இன்றைக்கு அந்த திட்டங்களை எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வருவதால் அவருக்கு வயிற்றெரிச்சல். அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால், எதையாவது சொல்லி ஆக வேண்டும்… தான் இருப்பதை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக.. அரசின் மீது ஏதாவது பழிகளை சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வழக்கறிஞர்களோடு கலந்து கொண்டு மக்களுக்கு எந்த பிரச்னையும் வராத வகையில் நடந்து கொள்வது தான் எங்களது பழக்கம். தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர். நிச்சயமாக மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கையும் சட்ட வல்லுநர்களோடு கலந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். .

அமைச்சர் ரகுபதி

தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதை முன்னாலேயே சொல்ல முடியாது அது சஸ்பென்ஸ். தேர்தலில் கதாநாயகன் அதுதான். தமிழ்நாடு முதலமைச்சர் தான் அதை வெளியிடுவார். அதற்கு பிறகு தான் தேர்தல் பிரகடனம் தெரியும். தமிழ்நாட்டில் தேர்தல் களம் தி.மு.க-வுக்கா அல்லது பா.ஜ.க-வுக்கா என்பது அல்ல. தமிழ்நாட்டில் பா.ஜ.க இன்றைக்கும் கால் ஊன்றவில்லை. வெளிப்படையாக பா.ஜ.க நடிப்பை நடத்தி வருகிறார்கள். வளர்ந்ததைப் போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

பண பலத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் அவர்களது கட்சி இருப்பதைப் போல் ஒரு பாவனையை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் வாக்குகளை எண்ணும் பொழுது அவர்கள் பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் என்ன என்பது தெரிய வரும். தி.மு.க-வை எந்த கூட்டணியும் தொட முடியாது. நாங்கள் 40-க்கு 40 நிச்சயம் வெல்வோம். எங்கள் கூட்டணி வெற்றி பெறும். மேக்கேதாட்டூ விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும், குழுவிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவர் துறை சார்பில் அவர் அதை பார்த்துக் கொள்வார். மேக்கேதாட்டூ அணை விவரத்தில் தமிழ்நாடு அரசு எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை. அதற்கு தகுந்த பதிலை நீர்வளத்துறை அமைச்சர் தருவார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *