இந்த விவகாரத்தில் மாநில அரசையும், வனத்துறை அமைச்சரையும் விமர்சித்து பேசியிருந்தார் கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முரளீதரன். மேலும், மக்கள் போரட்டமும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து வயநாட்டில் வனவிலங்குகள் தாக்குதல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் வனவிலங்குகள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு அதிகாரியை நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் தாக்குதல் நடத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வன விலங்குகள் மீது மயக்க ஊசி செலுத்துதல் உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் வகையில் அந்த அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வயநாடு வன எல்லைகளில் உள்ள ரிசாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது எனவும், ரிசாட்டுகளில் இரவு நேரத்தில் டிஜே பார்ட்டிகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. வன எல்லை பகுதிகளில் இரவு ரோந்தை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது, “வனவிலங்கு தாக்குதலால் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களுக்கு 11.5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் செட்டுகள், ட்ரோன் உள்ளிட்டவை வாங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பென்சிங் வேலி அமைப்பதற்கான சாத்தியகூறுகள் ஆராயப்படும். வனவிலங்கு தாக்குதலை தடுக்க பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நாம் ஒன்றாக இணைந்து வனவிலங்கு தாக்குதலை தடுப்போம்” என கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY