இந்த ஆலோசனையில் அமலாக்கப் பிரிவு நடத்தும் விசாரணைக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது ஹேமந்த் சோரன் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று மதியம் முதல் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனை விசாரித்து வந்தது. இதற்கிடையில்,
இன்று மாலை ஜார்கண்ட் ஆளுநரைச் சந்தித்த ஹேமந்த் சோரன், தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தற்போது ஜார்க்கண்ட் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.