“எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்தை பற்றி பேச தகுதியில்லை!” – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் | vaithilingam slams edappadi palanisamy in ops meeting

15411d00 E272 4965 8e1c Dc4f2c157806.jpg

அவர் எங்களை துரோகி என்று சொல்கிறார். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபன்னீர்செல்வம், பிரதமர் மோடி ஆகியோருக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகத்தின் மொத்த உருவமான அவருக்கு துரோகத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. தேர்தல் கூட்டணிக்கு குழு அமைத்திருக்கிறார். கூட்டணி பேசுவதற்கு யாரும் வராத போது எதற்கு இந்த அமைப்பு… உனக்கு வெட்கமாக இல்லை.

ஓ.பி.எஸ் அணியினை ஆலோசனை கூட்டம்

ஓ.பி.எஸ் அணியினை ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க ஒன்றுபடுவதற்கு எடப்பாடி பழனிசாமி தடையாக இருந்தால், அவரை தூக்கி எறிந்து விட்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சியில் அமர வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி போன்ற இடையர்களை தூக்கி எறிந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியை காப்போம் அதற்கு தொண்டர்கள் துணை இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது. நான்கரை வருடம் துணையிருந்த பா.ஜ.க-வுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்வார். துரோகியை ஒழித்து அ.தி.மு.கவை காப்பாற்றுவோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *