கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் சாலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று இரவு அங்கு சாலைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் சிவக்குமார், பழனிசாமி, சிவாஜி, கார்த்திக் ஆகியோரை,
பொள்ளாச்சி நகராட்சி துணைத் தலைவர் கௌதம் (தி.மு.க) மற்றும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பார் நாகராஜ் ஆகியோர் இணைந்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.