நேரு முதல் மோடி வரை; இந்திய வரலாற்றில் கவனம் ஈர்த்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் – ஓர் அலசல்! | No Confidence Motions that shocked Indian Political History a brief view

Whatsapp Image 2023 07 27 At 4 48 31 Pm.jpeg

12. 1970, ஜூலை: மீண்டும் மது லிமாயே இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். இதில் 137 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 243 எம்.பி-க்கள் எதிராகவும் வாக்களிக்க, தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

13. 1973, நவம்பர்: இந்திரா காந்தி அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.பி ஜோதிர்மாய் பாசுவால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்துக்கு 251 எம்.பி-க்கள் எதிராகவும், 54 எம்.பி-க்கள் ஆதரவாகவும் வாக்களித்த நிலையில், தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

14. 1974, மே: ஜோதிர்மாய் பாசு மீண்டும் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

15. 1974, ஜூலை: இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மீண்டும் ஜோதிர்மாய் பாசு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். வாக்கெடுப்பில், 63 எம்.பி-க்கள் தீர்மானத்துக்கு ஆதரவும், 297 எம்.பி-க்கள் எதிர்ப்பும் தெரிவிக்கவே, தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

மொரார்ஜி தேசாய்

மொரார்ஜி தேசாய்

16. 1975, மே: ஜூன் 25, 1975 அன்று எமர்ஜென்சி அமல்படுத்தப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, ஜோதிர்மாய் பாசுவால் மீண்டும், இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

17. 1978, மே: மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக அப்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சி.எம்.ஸ்டீபன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

18. 1979, ஜூலை: ஒய்.பி.சவானால், மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. விவாதம் முடிவடையும் முன்பே மொரார்ஜி தேசாய் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலிலிருந்து விலகிவிட்டார். அப்போதுதான் வாக்கெடுப்பு நடத்தப்படாமலே முதல் முறையாக ஆட்சி கவிழ்ந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *