“நிகழ்ச்சி முழுவதும் முதல்வர் மேற்பார்வையில் நடந்திருக்கிறது. `நிகழ்ச்சியைத் திருச்சியில் நடத்தலாம்’ என்றதுமே, அதை நேருவிடம் ஒப்படைக்கலாம் என்பதும் முதல்வரின் சாய்ஸ்தான் என்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன் 65, அவித்த முட்டை, தயிர் சாதம் என அசத்தலான விருந்துக்கும் கே.என்.நேரு ஏற்பாடு செய்திருந்தார்.
6,000 கிலோ மட்டன், 4,000 கிலோ சிக்கன், 5,000 கிலோ சீரகச் சம்பா அரிசி, 30,000 முட்டை என தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார். சாப்பாட்டுக்கான செலவு மட்டும் சுமார் கோடியைத் தாண்டும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மேடை அமைப்பு, பந்தல், வரவேற்பு ஏற்பாடுகள் என இதற்கும் மிகப்பெரிய செலவு செய்திருக்கிறார் நேரு. அது மட்டும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது” என நிகழ்ச்சியில் நடந்த சில சிக்கல்களைப் பகிர்ந்துகொண்டார் அதில் பங்கேற்ற சீனியர் அமைச்சர் ஒருவர்.
“நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது அனைத்து பாக முகவர்களுக்கும் ஐ.டி கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலுள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், அவரின் முழுத் தகவல்களும் இதில் அடங்கும். பாக முகவர்கள்தான் தேர்தலை நடத்தும் அச்சாணி. எனவேதான், தலைமை தன் தேர்தல் பணியை முதலில் பாக முகவர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறது” எனப் பகிர்ந்துகொண்டார்.
தி.மு.க-வின் இந்த முயற்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எந்த அளவுக்குப் பயன்படப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.