Tamil News Live Today: தஞ்சை, திருச்சி, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ சோதனை! | Latest Tamil News Live Updates Dated On 23 07 2023

21 02 2023 Nia 23336088 81032257.jpg

தஞ்சை, திருச்சி, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ சோதனை!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், 5 பேர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 24 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில், மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *