பாகிஸ்தான் பெண்ணின் பப்ஜி காதல்: இந்திய குடியுரிமைக்கோரி குடியரசுத் தலைவர் முர்முவுக்கு மனு தாக்கல்! | Seema Haider writes to President Murmu amid demands for her deportation to Pakistan

Seema Haider Pk.png

சீமா ஹைதர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் ஏஜென்டாக இருப்பாரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும், இந்தியாவில் இருக்க சீமா ஹைதர் தொடர்ந்து போராடி வருகிறார். மேலும், இந்தியாவில் வாழ குடியுரிமைக் கோரி குடியரடித் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனுத் தாக்கல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சச்சினுடன் சீமா

சச்சினுடன் சீமா

அவர் தன்னுடைய மனுவில், “இந்திய கலாசாரம் மற்றும் மரபுகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டிருக்கிறேன். என்னை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த தீவிர முயற்சிகள் நடந்து வரும் நிலையில், கருணையுடன் என்னை இங்கேயே இருக்க அனுமதியுங்கள்” எனக் கோரியிருக்கிறார்.

ஆனால், சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப உத்தரப்பிரதேச தீவிரவாதத் தடுப்புப் படை பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பினால் அவர் கொலைசெய்யப்படுவார் என பாகிஸ்தானிலிருந்து சிலரால் எச்சரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *