`மேற்குவங்க சம்பவத்துக்கு போராடிய பாஜக, புதுச்சேரி சிறுமி கொலையில் அமைதியானது ஏன்?’ – நாராயணசாமி | Narayanasamy blams BJP women’s team for not conducting bandh to the massacre of the girl
எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் ரெஸ்டோ பார்களை திறந்து, இளம் பிள்ளைகளை சீரழிக்கும் வேலையை என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க அரசு செய்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் கொலை நகரமாகி வருகிறது. ரெளடிகள் அதிகரித்துவிட்டார்கள். மக்கள், வியாபாரிகள், தொழிற்சாலைகளை மிரட்டி ரவுடிகள் மாமூல் கேட்டுகிறார்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். ஆனால், இந்த அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகத்திலேயே ரெளடிகள் இருப்பதுதான் அதற்குக் காரணம். ரெளடிகளின் உறைவிடமாக பாஜ.க வந்துவிட்டது. ரெளடிகள் பா.ஜ.க-வில் இணைந்தால்…