90 சதவிகிதம் மாற்றுத்திறனாளியான சாய்பாபா நேற்று வரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை. இவ்வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியதும், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும், தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதற்கு முன்பு ஒரு முறை உயர் நீதிமன்றம் சாய்பாபாவை விடுதலை செய்தது. உடனே மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் இரண்டாவது முறையாக விசாரித்து சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை விடுதலை செய்திருக்கிறது.
Breaking News, 24/7