Junior Vikatan – 14 February 2024 – “நாட்டைக் கொள்ளையடிக்க விடமாட்டேன்” என்ற பிரதமர் மோடியின் கருத்து? – ஒன் பை டூ
இனியன் ராபர்ட், மாநிலச் செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்.“வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதையே பிரதமர் வழக்கமாக வைத்திருக்கிறார். கொரோனா பேரிடர் காலத்தில் உருவாக்கப்பட்ட பி.எம்.கேர் நிதி குறித்தும், அந்த நிதி செலவுசெய்யப்பட்டது குறித்தும் இதுவரை இந்த அரசு ஏதாவது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறதா… இரண்டாவதாக இதுவரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 95 சதவிகிதத் தேர்தல் பத்திரங்கள் பா.ஜ.க-வுக்குத்தான் வந்திருப்பதாகத் தெரியவருகிறது. அந்த நிதியை பா.ஜ.க எப்படிச் செலவு செய்துவருகிறது என்று சொல்ல முடியுமா… சி.ஏ.ஜி அறிக்கையில், 7.5 லட்சம் கோடி ரூபாய்…