Junior Vikatan – 14 January 2024 – `எந்த மாநிலமும் தமிழகத்துக்கு ஈடாக சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை’ என்ற முதல்வரின் கருத்து?
சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“முதல்வர் உண்மையைச் சொல்லியிருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதேபோல எண்ணூர் பகுதியில் எண்ணெய் கொட்டியது. அதை பக்கெட்டில் அள்ளியதைக் கண்டு நாடே சிரித்தது. சமீபத்திலும் பேரிடர் சமயத்தில் ஒன்றிய அரசு நிறுவனத்தின் அலட்சியத்தால் அப்படி ஒரு நிலை உண்டானது. ஆனால், பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எண்ணெயைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறோம். அதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை வழங்கியது தி.மு.க அரசு. பாதிக்கப்பட்ட பறவைகளுக்குக்கூடச் சிகிச்சை வழங்கியது எங்களுடைய அரசு. ஒன்றிய பா.ஜ.க அரசு,…