தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர், நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. ஆனால், அவை ஒழுங்காக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கவில்லை எனப் புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
Breaking News, 24/7