Chengalpattu Tragedy: Arrest of Tirunambi Man in Gruesome Murder of Female Engineer | பெண் மென்பொறியாளரை கொலை செய்த திருநம்பி கைது…. ஒருதலை காதலால் அரங்கேறிய கொடூரம்

351085 Chengalpattumurder.jpg

செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி அடுத்த பொன்மார், வேதவிரி நகர் பகுதியில் பெண் கை கால்கள் கட்டப்பட்டு எரித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அந்த பெண் உயிரிழந்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்த்தபோது கை, கால்களை சங்கிலியால் கட்டப்பட்டு தீ வைத்து எரித்துள்ளது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

பின்னர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகில் இருந்த செல்போனை எடுத்த போலீசார் அதில் இருந்த ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த 26 வயதான நந்தினி என்பதும், மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த நந்தினி சென்னை கண்ணகி நகரில் தங்கி பணிபுரிந்து வந்தது முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார்-வைகோ

அதை தொடர்ந்து பெண் மென்பொறியாளரை கொலை செய்தது யார்?, என்ன காரணத்திற்கு கொலை நடந்துள்ளது?, கொடூரமாக கொலை செய்ய காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் நந்தினியின் நெருங்கிய நண்பர் திருநம்பி கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் என்ற திருநம்பியை கைது செய்தனர். பின்னர் வெற்றிமாறனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலைக்கான உண்மை தெரியவந்தது. அதில், மதுரையை சேர்ந்த நந்தினியும், கொலை செய்த வெற்றிமாறன்(26) என்ற திருநம்பி இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். பள்ளி பருவத்தில் தோழிகளாக இருந்து வந்த இருவரும் நேற்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். திருநம்பி வெற்றிமாறன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெண்ணாக இருந்து வந்த நிலையில் திருநம்பியாக மாறியுள்ளார். 

நந்தினி மற்றும் திருநம்பி வெற்றிமாறன் இருவரும் சென்னை பெருங்குடியில் உள்ள ஒரே ஐடி நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று கொலையான மென்பொறியாளர் நந்தினிக்கு இன்று பிறந்தநாள். அதை முன்கூட்டியே கொண்டாட நெருங்கிய நண்பரான திருநம்பி வெற்றிமாறன் கேட்டுக் கொண்டதன் பேரில் இருவரும் காலையிலேயே வெளியே சென்றுள்ளனர். பிறந்தநாளில் நந்தினியை சந்தோஷப்படுத்த காலையில் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர் ஆதரவற்ற காப்பகத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உதவிகளை செய்து நந்தினியை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளர். 

பின்னர் மாலை கொலை சம்பவம் அரங்கேறிய இடத்திற்கு அழைத்து சென்றபோது, இங்கு என்ன உள்ளது? ஏன் நாம் அங்கு போகிறோம்? என்று நந்தினி கேட்க உனக்கு சர்ப்ரைஸ் உள்ளது என்று கூறி திருநம்பி வெற்றிமாறன் அழைத்துச் சென்றுள்ளார். நண்பனின் மீதுள்ள நம்பிக்கையில் வெற்றிமாறனுடன் சென்றுள்ளார் நந்தினி. சர்ப்ரைஸ் கொடுப்பதாக நந்தினியை அழைத்து சென்று முதலில் துணியால் கண்ணை கட்டியுள்ளார். அதன் பின்னர் கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் கட்டியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என்று நந்தினி கேட்க உனக்கு சர்ப்ரைஸ் என்று சொல்லி நந்தினியை நம்ப வைத்துள்ளார். 

வெற்றிமாறன் மீது அதிகளவு இருந்த நம்பிக்கையால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கை மணிக்கட்டை பிளேடால் அறுத்துள்ளார். அதேபோல் கால், கழுத்து என பல இடங்களில் பிளேடால் அறுத்துள்ளார். வலி தாங்க முடியாமல் நந்தினி கத்தியதும் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார் திருநம்பி வெற்றிமாறன். அதை தொடர்ந்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்து நந்தினி உடல் மீது ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார் திருநம்பி வெற்றிமாறன்.

நந்தினி சென்னை கண்ணகி நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். பள்ளி பருவத்தில் இருந்து தோழிகளாக இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருநம்பியாக மாறிய வெற்றிமாறன் நந்தினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது காதலை நந்தினியிடம் கூறியபோது நந்தினி அதை ஏற்க மறுத்துள்ளார். அதை தொடர்ந்து வெற்றிமாறனிடம் பேசுவதை நந்தினி நிறுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நந்தினி பணிபுரிந்து வந்த ஐடி நிறுவனத்தில் உடன் பணியாற்றி வந்த ராகுல், வெங்கட் இருவரிடமும் பேசி பழகி வந்துள்ளார். இது பிடிக்காத வெற்றிமாறன் ஒரு கொலை திட்டம் தீட்டியுள்ளார். இன்று நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாக வெளியே செல்லலாம் என்று கூறி நேற்று பகல் முழுவதும் சந்தோஷமாக பார்த்துகொண்டு மாலை கொடூரமாக கொலை செய்துள்ளார் திருநம்பி வெற்றிமாறன் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒருதலை காதலால் கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | தூத்துக்குடி வரும் நிர்மலா சீதாராமன்..! பின்னணி இதுதான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *