பழைமையான கொற்றவை சிலை கண்டெடுப்பு | மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – News In Photos

Img 1689943021284.jpg

ராமநாதபுரம்:

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித் திருக்கல்யாண உற்சவத்தின் 9 -ம் நாள், ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாளுடன் கூடிய தேரோட்டம் நடந்தது.

கடலூர்:

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பழனி, விவசாயிகளுக்கு பருவத்தில் விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மதுரை: அழகர்மலை ராக்காயி அம்மன் கோயிலில் நடந்த ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் நூபுரகங்கை தீர்த்தத்தில் புனித நீராடினர்.
ராமநாதபுரம்:

மணிப்பூரில் சிறுபான்மையின மக்களைப் பாதுகாக்கக் கோரி, தங்கச்சி மடத்தில் கண்டனப் பேரணி நடந்தது.

சென்னை:

அண்ணாசாலையில் மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர்: தேவி கருமாரியம்மன் ஆலயத்தின் 47-ம் ஆண்டு ஆடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடர்பான விண்ணப்பம் படிவம் பெறுவது குறித்த முன்னோட்டப் பயிற்சியை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வுசெய்தனர்.

சேலம்:

ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், `தொட்டுவிடும் தூரத்தில் இலக்கு’ எனும் உயர்கல்வி பயில்வதற்கான கருத்தரங்கில் பங்கேற்றார்.

தூத்துக்குடி:

ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு மான்கள் சரணாலயப் பகுதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக், பீங்கான் கழிவுப் பொருள்கள்.

தூத்துக்குடி:

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சென்னை:

சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

சென்னை:

மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசைக் கண்டித்து, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் உயர் நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்:

களவாடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸார்.

புதுச்சேரி:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி, அவரது உருவ ச்சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகர்:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்.

விருதுநகர்:

அருப்புக்கோட்டை அருகே வைப்பாறில் 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது.

புதுச்சேரி:

சுகாதாரத்துறை, அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ அறுவை சிகிச்சையில் பயனடைந்த குழந்தைகள் முதல்வர் ரங்கசமியைச் சந்தித்து, நன்றி கூறினர்.

சென்னை:

மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசைக் கண்டித்தும், பழங்குடியினப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி:

அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் “ஃபெத்தே டி புதுச்சேரி” கலைவிழா நடத்துவது தெடர்பான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் நடந்தது.

புதுச்சேரி:

சட்டப்பேரவை வளாகத்தில் வேருடன் சாய்ந்த 40 ஆண்டுகள் பழைமையான மரத்தை அப்புறப்படுத்தும் பணியை சபாநாயகர் செல்வம் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் நகர் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமான முக்கடல் அணைக்கட்டில், போதிய மழை பெய்யாததால் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது.

தேனி:

வருசநாடு மூல வைகைப் பகுதியில் மழை பொழிவு குறைந்ததால், வைகை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்திருக்கிறது.

தேனி:

ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று, சமதர்மபுரம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயிலில் புல்லட் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நீலகிரி:

மசினகுடி பகுதியில் பூத்த தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள்.

ஈரோடு:

ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று திருநகர் காலனி, முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தென்காசி:

அருள்மிகு சங்கரநயினார் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவுக்காக கோமதி அம்பாள் சன்னிதி முன்பு அமைந்திருக்கும் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *