இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைபள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்,சமூக பாதுகாப்புத்துறை,ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாகாக கொண்டாடப்பட்டு வருகிறது. இநத விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ. 10 , 000 ரூபாய் (பத்தாயிரம் மட்டும்)ரொக்கப் பரிசும். ரூ.2, 500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.
Breaking News, 24/7