ஒரு சமயம் தூத்துக்குடிக்கு காந்தியடிகள் வருகை தந்திருந்தார். அப்போது மேடையில் பாடிய ஒரு சிறுவனின் குரல் பார்வையாளர்களை ஈர்த்ததை காந்தி கவனித்தார். அவரது திறமையை கண்டு வியந்த காந்தியடிகள் விஸ்வநாத தாசை பாராட்டினார். மேலும் உன் திறமை நாட்டிற்கு பயன்படும். சுதந்திர பணியில் உன்னை அர்ப்பணித்து கொள் என்று காந்தி அறிவுறுத்தினார். இதையடுத்து விஸ்வநாத தாஸ் தன் வாழ்நாள் முழுவதும் இசை தமிழாலும், நாடக தமிழாலும் தேச உணர்வை ஊட்டி வந்தார். விஸ்வநாததாஸ் சமகாலத்தில் போராட்டங்களை முன்னெடுத்திருந்த தீரர் சத்தியமூர்த்தி, வ.உசிதம்பரம் பிள்ளை, காமராஜர் போன்றோரிடம் நெருங்கி பழகி இருந்தார்.
Breaking News, 24/7