Day: December 27, 2023
புதுச்சேரி: “தமிழக அரசைக் குற்றம் சொல்வது என் நோக்கமில்லை!” – என்ன சொல்கிறார் தமிழிசை? | Puducherry lieutenant Governor Tamilisai said that she is not intended to blame Tamil Nadu government
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காகச் சென்ற தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, “தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை, தமிழக அரசு இன்னும் எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும். எச்சரிக்கை முன்னேற்பாடுகளை சரியாக எடுத்திருக்க வேண்டும். தமிழக மழை வெள்ளத்தில் திராவிட மாடல், திண்டாடும் மாடலாக மாறிவிட்டது” என்று தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தமிழிசையை கடுமையாக…
HT Exclusive: ’லிஸ்ட் ரெடி! 15 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்!’ திருச்சி சூர்யா சிவா நச் பேட்டி!-ht exclusive bjp obc unit state general secretary trichy surya siva exclusive interview
பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அளித்த நேர்காணல்:- கேள்வி: அரசியலில் இடைவெளிக்கு பிறகு உங்கள் முகம் தென்படத் தொடங்கி உள்ளதே? திருச்சி சூர்யா சிவா: வாழ்க்கை என்பது இசிஜி போலத்தான் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். கட்சியை விட்டு வெளியில் இருந்தாலும் கட்சி வேலைகளை செய்து கொண்டுதான் இருந்தோம். குடும்பத்திற்காக நேரம் ஒத்துக்கவும், என் மீது திமுக போட்ட 14 வழக்குகளை தீர்க்கவும் இந்த காலகட்டம் பயன்பட்டது….
Eiffel Tower: ஈபிள் டவர் மூடல்; சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு! – காரணம் என்ன?
பிரான்ஸில் இருக்கும் ஈபிள் டவர் உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஈபிள் டவர் கட்டப்பட்டு 134 ஆண்டுகள் ஆகின்றன. ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த ஈபிள் டவர், உலகின் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த ஈபிள் டவரைக் காண, ஒவ்வொரு நாளும் சுமார் 20,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர். ஈபிள் டவர் ஈபிள் கோபுரம் பொதுவாக ஆண்டுக்கு 365 நாள்களும் திறந்திருக்கும். டிசம்பர்…
புதுச்சேரி: கொரோனாவால் தொழிலாளி உயிரிழப்பு; மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட உறவினர்கள்!
புதுச்சேரி, உருளையன்பேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தன், கூலித் தொழிலாளர். கடந்த 19-ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக நடவடிக்கைகளை எடுக்காமல், நகராட்சி அதிகாரிகள் காலம்…
TNEB: ’தென் மாவட்ட மக்களே உஷார்!’ மின்சார வாரியம் விடுத்த அவசர எச்சரிக்கை இதோ!-tamil nadu electricity board press release regarding the use of electrical appliances by the people of southern district
இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்கால அடிப்படையில், பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. Credit
DMK vs BJP: ‘ரவுடிகளை கண்டுகொள்வதே இல்லை!’ திமுகவை விளாசும் வானதி!
”திரு. மு.க.ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் திரு. உதயநிதியையும், திமுக அரசையும் விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களை எல்லாம் தேடித்தேடி கைது செய்யும் திமுக அரசின் ரவுடிகளையும், சமூக விரோதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை” Credit
ராணுவக் காவலில் மூவர் இறப்பு; `கவனமுடன் செயல்படுங்கள்!' – வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ராஜ்நாத் சிங்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலுள்ள பஃபலோஸ் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று, இரண்டு இந்திய ராணுவ வாகனங்கள்மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் 9 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றது. அவர்களில் குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த சௌகத் அகமது, ஷபீர் அகமது உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக, அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று…
`விபத்து வழக்குகள்; போலீஸாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள்!’ – நீதிமன்றம் காட்டம் | chennai high court expressed its displeasure over the accident case investigation by police
சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த அருளப்பன் என்பவர், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்ணைக்கு வந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி, மரணமடைந்தார். இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி அவர் மனைவி, சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் குறிப்பிட்ட லாரி, விபத்தில் ஈடுபடவில்லை என்றும், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் லாரியின் எண் குறிப்பிடப்படவில்லை என்றும், இந்த வழக்கில் குறித்த…