“பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்!” – நயினார் பாலாஜி விளக்கம்
நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, பா.ஜ.க-வில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறார். அவர் சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு செய்திருப்பதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. செய்தியாளர் சந்திப்பு அந்த நிலம் மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமானது எனவும், மதுரையைச் சேர்ந்த இளையராஜாவுடன் சேர்ந்து நயினார் பாலாஜி மோசடியாக நெல்லை…